Monday, January 10, 2011

கொடிய நரகம்

ஒருவன் இறந்தபின்,தான் நரகத்தில்  இருப்பதாக உணர்ந்தான்.ஆனால் எல்லோரும் பயமுறுத்தியதை போல்கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகளோ, வேறு எந்த பயங்கரமான் சம்பவங்களோ  இல்லை.அவன்  ஒரு குளிரூட்டப் பட்ட,அழகான வேலைப் பாடுகளுடனும் எல்லா வசதிகளும்  உள்ள ஒரு அறையில் இருந்தான்.ஆனால் அந்த அறையில் வெளியே செல்லும் வழி கிடையாது.அவனுடன் அந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்.கேட்ட ஆசைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப் பட்டன.உடன் இருந்தவர்கள்,ஒரு வயதான பெண்,ஒரு இளம் பெண்,ஒரு இளைஞன்.ஓரிரு நாட்கள் அவர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேசிப் பேசி,இனிப் பேச ஒன்றுமில்லை என்ற நிலை.பேச்சைத் தொடர வழியில்லை.அங்குள்ள விளக்குகளை அணைக்க இயலாது.அவர்கள் உண்டார்கள்;உறங்கினார்கள்.அவர்கள் தனிமையிலும் இல்லை.ஆக அவர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் உண்டாக்குபவர்கள் ஆகிவிட்டார்கள்.திடீரென விழித்துக் கொண்ட மனிதனுக்கு இது தான் நரகம் என்பது தெரிந்தது.அவனுக்கு அங்கே இனி வாழ்வது முடியாத காரியமாய்த் தோன்றியது.மற்ற மூவரின் இருப்பே சுமையாகத் தெரிந்தது.தற்கொலை செய்து கொள்ள வழியில்லை.இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்ட போது,நரகம் அழிவில்லாதது என்று பதில் வந்தது.ஆக, அடுத்தவர் தான் நரகம்.நம்முடைய மதங்கள் சித்தரிக்கும் நரகத்தை விடக் கொடியது.இதற்குப் பதிலாக எண்ணைக் கொப்பரையில் தூக்கி எறியப் பட்டால் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மூடப் பட்ட அறையில் சிலருடன் எப்போதும்  இருப்பது என்பது பெரிய நரகம் தான்!
                                               ---   ஜீன் பால் சார்த்ரே சொன்ன  கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment