Sunday, January 2, 2011

என்ன நோய்?

மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த பெண்மணி ஒருவரை மருத்துவர் பார்க்க வந்தார்.அவளுடைய அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடத்தில் அவர் வெளியே வந்தார்.வெளியே காத்திருந்த அவளுடைய கணவனிடம்,''ஒரு கார்க் ஸ்க்ரு வேண்டும்''என்று கேட்டார்.
சீசாவின் கார்க்கை எடுக்கும் ஸ்க்ரு எதற்கு என்று குழம்பியபடி அதை தேடி எடுத்துக் கொடுத்தான்.மருத்துவர் மீண்டும் உள்ளே போய் விட்டு ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''இப்போது ஸ்க்ரு டிரைவர் வேண்டும்,''எனக் கேட்டார்.
கணவனுக்கு ஒரே வியப்பு.எதற்கு என்று கேட்கவில்லை.டாக்டருக்குத் தெரியாதா என்று மௌனமாக எடுத்துக் கொடுத்தார்.
டாக்டர் உள்ளே போய் விட்டு,ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''ஒரு அரமும் சுத்தியும் வேண்டும்,''எனக் கேட்டார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாத கணவன் 'என் மனைவிக்கு என்னதான் ஆச்சு?'என்று கேட்டான்.
''அது இன்னும் தெரியவில்லை.என் பையைத் தான் திறக்க முடியவில்லை.''என்றார் டாக்டர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment