Sunday, January 2, 2011

நரம்புக் கோளாறு

ஒரு சின்னக் குழந்தை கடற்கரை மணலில் விளையாட ஆசைப்பட்டது.''வேண்டாம்,மணல் ஒரே ஈரம்.ஆடைகள் அழுக்காகிவிடும்.''என்றாள் தாய்.சரியென்று சொல்லி குழந்தை தண்ணீருக்கு அருகில் சென்றது. தாய்,''ஐயோ,வேண்டாம்.நீ உள்ளே விழுந்து விடுவாய்.''என்று கத்தினாள்.சரி,ஓடி விளையாடிக் குதிக்கலாம் என்று ஆரம்பித்தது குழந்தை.''வேண்டாம்,கூட்டத்தில் காணாமல் போய் விடுவாய்,''என்று தடுத்தாள் தாய்.அப்போது ஐஸ் க்ரீம் விற்பவன் வந்தான்.குழந்தை ஐஸ் க்ரீம் கேட்டது.''வேண்டாம்,தொண்டை கெட்டுவிடும்.உடம்புக்கும் கெடுதல் என்று மறுத்தாள் தாய்.குழந்தை அழுதாள்.தாய் அருகில் இருந்தவரிடம்,''இப்படி ஒரு நரம்புக் கோளாறு உள்ள குழந்தையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?''என்று கேட்டாள்
யாருக்கு நரம்புக் கோளாறு?.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment