Sunday, January 2, 2011

பொன்மொழிகள் (2)

மனிதர்களை நீ எடை போட்டுக் கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க உனக்கு நேரமே கிடைக்காது.
**********
வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்.
பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.
**********
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையனாகிறான்.
***********
சட்டென்று பதில் உரைப்பவனுக்கு அறிவு மட்டம்.
***********
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து வரும் நச்சுப் புகை.
**********
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
*********
திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால்,நீ வெற்றி
பெறுவதற்காகவே பிறந்தவன் என்று எண்ணி விடாதே.
********
சோம்பேறித்தனம் தற்கொலைக்கு சமம்.
**********
நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமா? மௌனம் .
***********
கடலில் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி
உலகிற்கு அக்கறையில்லை.
கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா
என்பதில் தான் அக்கறை.
***********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment