Sunday, January 2, 2011

சிரிப்பு வெடிகள்

கணவன்:அன்பே,உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா,கோவில் எழுப்பவா?
மனைவி:நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால் தூங்கும் போது மட்டும் எழுப்பாதீங்க.
**********
இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.
ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.
மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!
************
தமிழறிஞர் ஒருவர் படிப்பறிவில்லாத முதியவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அறிஞர்:என்ன வியாபாரம் செய்றீங்க?
முதியவர்:வாயப்பயம்.
அறிஞர்:எந்த ஊர்?
முதியவர்:கெயக்கே.
அறிஞர்:ஏன் இந்த வயதில் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?
முதியவர்:எதோ பொயப்பு.
அறிஞர்:தமிழை இப்படியா பேசுவது?
முதியவர்:என்ன செய்ய?பயக்கமாப் போச்சு.
அறிஞர்:(கோபத்துடன்)போய்யா கெயவா.
************
''அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா''
'சரி,அதனாலென்ன?'
''எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி.....''
'இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?'
''அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!''
************
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
**************
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment