Sunday, January 2, 2011

உத்தரவு

தளபதி ஒருவர்உறங்கும் பொது பெரிதாகக் குறட்டை விட்டதால் அவர் மனைவி தூங்க மிகவும் சிரமப்பட்டாள்.அவர் இடப்பக்கம் திரும்பிப் படுக்கும் போது தான் குறட்டை வந்ததாம். குறட்டை என்றால் அது சாதாரண குறட்டை அல்ல.உறுமல்.
அவள் உளவியல் மருத்துவரிடம் சென்றாள்.''இதென்ன பெரிய விஷயம்?குறட்டை விடும் போது அவரை வலப்பக்கம் திரும்பிப் படுக்கும்படி தள்ளி விடுங்கள்''என்றார் அவர்.
'ஐயோ,அது சிரமம்.அவர் ரொம்பத் தடியான ஆள்.தள்ள முடிவதில்லை .அப்படியே தள்ளினாலும் அவருக்கு கோபம் வருகிறது.எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன்.ஒன்றும் முடியவில்லை.'என்றாள் அவள்.
அது கேட்ட மருத்துவர் ,''கவலைப்படாதீர்கள்,அவர் காதருகே சென்று,'ரைட் டேர்ன்'என்று சொல்லி விடுங்கள்,அது போதும்,''என்றார்.
அந்த முறை வெற்றி பெற்று விட்டது.உத்தரவு என்றால் உத்தரவு தானே?அது அவர் மனதின் அடி ஆழத்தில் பதிந்திருந்ததால் அந்தக் கட்டளைக்குக் கீழ் படிந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment