Sunday, January 2, 2011

முல்லா

முல்லா உளவியல் மருத்துவரிடம் சென்றார்.''எனக்கு ஒரே குழப்பம்.ஏதாவது செய்யுங்கள்.சகிக்க முடியவில்லை.இரவு முழுவதும் ஒரே கனவு வந்து என்னை வாட்டி வதைக்கிறது.நான் ஒரு மூடிய கதவருகே நிற்கிறேன்.தள்ளுகிறேன்,தள்ளுகிறேன்,தள்ளிக்கொண்டே இருக்கிறேன்.கதவைத் திறக்க முடிய வில்லை.பிறகு விழித்துக் கொள்கிறேன்.வேர்த்து விறுவிறுத்து விடுகிறது.''என்றார்.
உளவியல் மருத்துவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.அரை மணி நேரம் விசாரித்து விட்டு,'முல்லா,அந்தக் கதவின் மீது என்ன எழுதி இருந்தது?'என்று கேட்டார்.
''இழு,என எழுதியிருந்தது,''என்று சாதாரணமாகச் சொன்னார் முல்லா.
*************
ஒரு நாள் இரவு முல்லா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.மனைவியின் கோபத்தைக் கண்ட முல்லா,''பொறு,பொறு.ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன்.அப்புறம் ஆரம்பித்துக்கொள்.நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று.''என்றார்.
'நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'என்றாள் மனைவி.
முல்லா தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் சொல்ல முடியவில்லை.கடைசியில் உற்சாகத்தோடு,''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,''என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment