Sunday, January 2, 2011

சமயோசிதமான பதில்

கிராமத்தில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.வெளியில் கடும் வெயில்.வேர்த்துக் கொட்டியது.பொறுக்க மாட்டாமல் சட்டையை கழற்றி பக்கத்தில் வைத்து விட்டு பாடம் சொல்ல ஆரம்பித்தார்.ஒரு பையன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவனை என்ன பார்க்கிறாய் எனக் கேட்டார்.அவனோ பள்ளிக்கூட ஆய்வாளர் வந்து கொண்டிருப்பதாக சொன்னான்.சட்டையை எடுத்து போடலாம் என்று நினைக்கும் போதே அவர் கதவை திறந்து உள்ளே வந்து விட்டார்.
ஆசிரியர்,''ஆகவே மாணவர்களே.நமது உடலில் இதயம் இங்கே இருக்கிறது.இரைப்பை கீழே இந்த இடத்தில் இருக்கிறது,''என்று தன உடம்பில் சுட்டி காட்ட ஆரம்பித்தார்.ஆய்வாளர் கேட்டார்,'இதையெல்லாம் சொல்லித்தர சார்ட் இல்லையா?'ஆசிரியர் சொன்னார்,''நானும் பல முறை கேட்டு எழுதி விட்டேன்.ஆனால் கிடைக்கவில்லை,சார்,''
ஆய்வாளர் ஒன்றும் சொல்லாமல் வெளியே போய் விட்டார். ஆசிரியருக்கு பயம் வந்து விட்டது. சில தினங்களில் சார்ட்டுகள் வந்தன.கூடவே ஒரு கடிதமும் வந்தது.அதில் ஆசிரியர் சிறப்பாக சொல்லிக் கொடுப்பதாகப் பாராட்டப் பட்டிருந்தார்.கூடவே சம்பள உயர்வுக்கான ஆணையும் இருந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment