Sunday, January 2, 2011

நாட்டுப்புறப்பாடல்

முக்காலைக் கைப்பிடித்து,மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தால் பதூரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கத் தேய்.

இதன் பொருள்:
முக்காலைக் கைப்பிடித்து =இரண்டு கால்கள் பற்றாமல் மூன்றாவது காலாகக்
கைத்தடி ஊன்றி
மூவிரண்டு போகையிலே =(மூவிரண்டு=ஆறு) வழிநடக்கும் போது
அக்காலை
ஐந்து தலை நாகம்=நெருஞ்சி முள்
அழுந்தக் கடித்தால்=காலில் தைத்தால்
பதூரதன் புத்திரன்=தசரதனின் மகன் ராமன்
மித்திரன்=நண்பன் (ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின்=எதிரியின்(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின்=மனைவியின்(வாலியின் மனைவி தாரை)
கால் வாங்கத் தேய்=(தாரை என்ற வார்த்தையில் காலைஎடுத்தால்,தரை)
தரையில் தேய்.
அதாவது காலில் நெருஞ்சி முள் குத்தினால் ,காலைத் தரையில் தேய்க்க வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment