Sunday, January 2, 2011

புலவரின் புதிர்

பல தூண்கள் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு புலவர் அமர்ந்திருந்தார்.அப்போது ஒருவன் ஓடி வந்து,''இந்தப் பக்கம் ஒருவன் ஓடி வந்தானே?அவன் எங்கே?''என்று புலவரைக் கேட்டான். திருடன் மறைந்திருக்கும் இடம் புலவருக்குத் தெரியும்.அவனைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.அதே சமயத்தில் பொய் சொல்லவும் விரும்பவில்லை.அதனால் நேரிடையாகக் கூறாமல் ஒரு புதிர் மூலம் பதில் அளித்தார்.
முருகனது கடைசி முகம் எது? (ஆறு)
வீட்டைத் தாங்குவது எது? (தூண்)
வேதத்தின் வேறு பெயர் என்ன? (மறை)
வேடன் வைத்திருப்பது என்ன? (வில்)
விடை:ஆறாவது தூண் மறைவில்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment