Sunday, January 2, 2011

மன பலவீனம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் குற்றவாளிகளைத் தண்டித்துக் கொண்டே தான் வந்திருக்கிறோம்.ஆனால் நமது தண்டனைகளால் அவர்கள் திருந்தினார்களா,மாறிவிட்டார்களா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
குற்றவாளிகளோ பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.சிறைச்சாலைகள் அதிகரிக்கின்றன.வழக்கு மன்றங்கள் பெருகி வருகின்றன.தவறுகளும் கூடிக் கொண்டே இருக்கின்றன.விளைவு?அதிகக் குற்றங்கள்!
பிரச்சினை என்ன?தவறு செய்ததற்குத்தான் தண்டிக்கப் பட்டோம் என்று குற்றவாளிகளும் உணரலாம்.ஆனால் மாட்டிக் கொண்டால் தான் தண்டிக்கப் படுகிறார்கள்.அதனால் அவனும் நியாயப் படுத்த ஆரம்பித்து விடுகிறான்.அடுத்த முறை இன்னும் தந்திரத்தோடு,புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.
இம்முறை அவன் சிக்கிக் கொண்டது தவறு செய்ததால் அல்ல.எச்சரிக்கையாக இல்லாததால்.சமுதாயம் அவனை விட புத்திசாலி என்று நிரூபித்து விட்டது.அடுத்த முறை அவன் அதை விடப் புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக பிடிபடப்போவதில்லை.ஆகவே தண்டனை மூலம் அவன் கற்றுக் கொண்ட பாடம்,அடுத்த முறை மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது தான்.
மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தால் திருடாதிருப்பவர்,யாருமே இல்லாத போது வாய்ப்பு அமைந்தால் திருடத்தான் செய்வார்.பயம் தான் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.நீங்கள் நல்லவராக இருப்பதெல்லாம் மன பலவீனத்தால் தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment