Sunday, January 2, 2011

பொன் மொழிகள் (1)

இது எனது இருநூறாவது இடுகை
***********************************
பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.
பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.
*******
வாக்குறுதி என்பது ஒரு வகையில் கடனே.
*******
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.
********
செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்.
செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.
********
கோபம் என்பது ஒரு குட்டிப் பைத்தியம்.
********
வணங்க ஆரம்பிக்கும் போது வளர ஆரம்பிக்கிறோம்.
********
தவறு கூடு தலாய் இருந்தால் பிடிவாதமும் கூடுதலாய் இருக்கும்.
*********
உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் பேசுகிறீர்களோ
அவ்வளவு அதிகம் பொய் சொல்ல நேரிடும்.
*********
நண்பன் என்பவன் உங்கள் குறைகளை எல்லாம் அறிந்தும்
உங்களை விரும்புபவன்.
********
ஒரு காரியம் சிரமமானது என்று பயப்படுகிறோம்.
உண்மையில் நாம் பயப்படுவதால் தான் அது சிரமமாகிறது.
*********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment