Saturday, January 8, 2011

ரொம்ப நல்லது

மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள்.
மாக்கி: ஹே டோரா,என்ன ஆச்சரியம்!உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!என்ன சமாச்சாரங்கள்?
டோரா: ஒன்றுமில்லை,உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன்.
மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா!ரொம்ப நல்ல செய்தி தான்!
டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை.அவன் மிகவும் மோசமானவன்.
மாக்கி: என்ன மோசமானவனா?நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை.அவனிடம் நிறைய பணம் இருந்தது.
மாக்கி : பரவாயில்லையே,பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல்.ரொம்ப நல்லது.
டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை.அவன் ஒரு கஞ்சன்.
மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய்.வருத்தமாக இருக்கிறது.
டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை.அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான்.
மாக்கி: சொந்தமாக வீடா!ரொம்ப நல்ல செய்தி தான்.
டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை.அந்த வீடு எரிந்து விட்டது.
மாக்கி: என்ன எரிந்து விட்டதா?கேட்கவே சங்கடமாக இருக்கிறதே?
டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை.அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment