Saturday, January 8, 2011

ஆனந்தம்

சீடன் ஒருவன் குருவின் கோபத்திற்கு ஆளான போது,குரு அளித்த சாபத்தினால் பன்றி ஆனான்.பன்றி ஆகுமுன் நண்பர்களிடம்,தான் பன்றியானதும் தன இருப்பிடத்தை குருவின் மூலம் அறிந்து தன்னைக் கொன்று விட வேண்டும் என்றும் தன்னால் அந்த பன்றி பிறப்பைத் தாங்க முடியாது என்றும் கூறினான்.
சாபம் பலித்து விட்டது..சீடர்கள் குரு மகிழ்ச்சியாய் இருக்கும் போது, அவரிடம் விபரம் கேட்டறிந்து குரு சொன்ன இடத்திற்குச் சென்றார்கள். தாயுடன் இருந்த ஆறு குட்டிகளில் சீடனான பன்றிக் குட்டியைக் கண்டுபிடித்து  தடியால் அடிக்கப் போனார்கள்.ஆனால் அந்தக் குட்டியோ ஓட ஆரம்பித்தது.
'நில்லு,நில்லு,நீ சொல்லித்தானே வந்திருக்கிறோம்' என்றனர் சீடர்கள்.
''அப்போது நான் சொல்லியிருக்கலாம்.ஆனால் இப்போது என்னை அடிக்காதீர்கள்.என்னிடம் என் தாயார் எத்தனை அன்பாக இருக்கிறார்!என்ன பட்டானது என் மேனி!.என்னை அடிக்கவே அடிக்காதீர்கள்.''என்ற
பன்றிக்குட்டி நில்லாமல் ஓடியது.
விக்கித்துப் போன சீடர்கள் குருவிடம்நடந்ததைக் கூறினார்கள்.குரு சொன்னார்,''நீங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமல் இருந்தேன்.உங்களுக்கு வேண்டுமானால் பன்றி செய்கின்ற காரியங்கள்  அருவருப்பாய் இருக்கலாம்.ஆனால் அதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதனுடைய ஆனந்தத்தை இல்லாமல் செய்ய நம்மால் முடியுமா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment