Saturday, January 8, 2011

மீன் வலை

ஒரு மன்னனிடம் இருந்த அறிவாளி சாகும்தருவாயில்,''எனக்குப் பதில் அடக்கமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.அடக்கம் தான் ஞானத்தின் அறிகுறி.''என்றார்.அரசனும்தூதர்களை அனுப்பி அடக்கமான ஒருவரை தேடிப் பிடிக்கக் கூறினான்.இதைக்  கேட்ட பணக்காரரான முல்லா,தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து,தூதர்கள் வரும் போதுமீன் வலையை சுமந்து கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டிருந்தார்.தூதர்கள்  கேட்டார்கள்,'நீ பணக்காரனாய் இருந்தும் ஏன்இந்த மீன் வலையை சுமக்கிறாய்?'
முல்லா சொன்னார்,''மீன் பிடித்து தான் பணக்காரன் ஆனேன்.எனக்கு பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில்  நான் எப்போதும் இந்த வலையை தோளில் சுமந்து செல்வது வழக்கம்.''
'பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால்,அவன் தன இறந்த காலத்தை சுத்தமாக துடைத்து விடுவான்.எதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல்
ஒரு புதிய இறந்த காலத்தை உருவாக்கி விடுவான்.ஆனால் இந்த மனிதன்,முல்லா,நிகவும் அடக்கமாக இருக்கிறான்,'என்று தூதர்கள் அரசனிடம் கூறினர்.முல்லா ஞானியாகக் கருதப் பட்டு  வேலையில் அமர்த்தப்பட்டார்.
அவர் வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன் கேட்டான்,'முல்லா,இப்போது உன் வலை எங்கே?'முல்லா சொன்னார்,''மீனை பிடித்தபின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment