Saturday, January 8, 2011

புன்னகை ஏன்?

ஒரு ஊரில் இறந்து போன மூன்று பேரின் உடல் அடையாளம் காண்பதற்காக  காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.இறந்த மூன்று பேரின் முகத்திலும் சிறு புன்னகை.இதற்கான காரணத்தை அறிய ஒரு அதிகாரி ஆவல் கொண்டு விசாரித்தார்.
ஒரு உடல் ஒரு கருமியுடையது.அவன் மிக்க மகிழ்ச்சியுடன் பணம் எண்ணிக் கொண்டிருந்த போது,மரணம் ஏற்பட்டுள்ளது.அதனால் தான் அந்தப் புன்னகை.
இரண்டாவது உடலுக்குரியவன் ஒரு சூதாடி.அவன் அன்று சூதாடும் போது  வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலி திடீரென வந்து இறந்து விட்டான்.அது தான் அவனுடைய புன்னகைக்குக் காரணம்.
மூன்றாவது ஆள் மின்னல் தாக்கி இறந்துள்ளான்.அவன் முகத்தில் ஏன்  புன்னகை?அவன் ஒரு அரசியல்வாதி.மின்னலின் ஒளியைக் கண்டவுடன்  அவன் யாரோ தன்னை போட்டோ எடுக்கும் போது வந்த ப்ளாஷ் லைட்  என  எண்ணிவிட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment