Saturday, January 8, 2011

தர்க்கம்

சீடன் தான் கண்ட பயங்கரமான கனவினை குருவிடம் விளக்கினான்,''நான்  காட்டு வழியே செல்லும் போது எதிரே நான் பார்த்திராத சிறு பிராணி ஒன்று வந்தது.அது என்னை நோக்கி நடந்து வந்தது.நான் பயந்து,அதை விரட்ட,ஒரு சிறு கல்லைத் தூக்கி அதன் மீது எறிந்தேன்.உடனே அது சிறிது பெரிய உருவமாகி என்னை நோக்கி வந்தது.நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து அதனை அடித்தேன்.சிறு பூனை போல இருந்த அது உடனே புலி போல் உருவெடுத்தது.ஓட முடியாத நான்,ஒரு பாறாங்கல்லை எடுத்து அதன் மேல்  எறிந்தேன்.அது யானையை விடப் பெரிய மிருகமாகி என்னை விழுங்க வந்தது. நான் வேகமாக ஓட,அது மலை போல் மாறி என்னை விரட்டியது.அப்போது தான் நான் பயத்தில் அலறி விழித்தேன்.இக்கனவின் பொருள்என்ன குருவே?''
குரு சிரித்தபடி சொன்னார்,''சிறு மிருகமாக இருந்து பெரியதாக மாறியதன் பெயர் தான் தர்க்கம்-விவாதம்.இறுதியில் மிகப் பெரியதாக உன்னை விழுங்க வந்தது அல்லவா?அது போலத்தான் விவாதமும்.சிறு விசயத்திற்காக யாரிடமாவது விவாதிக்கத் துவங்கி விட்டால்,அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய மலையாகி நம்மையே விழுங்கி விடும்.விரோதமே வளரும். எனவே யாரிடமும் எதைக் குறித்தும் விவாதம் செய்யாதே.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment