Saturday, January 8, 2011

எது பெரியது?

ஒரு காவல் துறை அதிகாரி,ஒரு காரை நிறுத்தி அதை ஓட்டி வந்தவரிடம் சொன்னார்,''சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்ததற்காக  உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாகக் கொடுக்கிறோம்.''என்றார்.காரை ஓட்டி வந்தவருக்கு மகிழ்ச்சி.அதிகாரி கேட்டார் ,''இந்தப் பணத்தை எப்படி உபயோகப் படுத்தப் போகிறீர்கள்?''அந்த ஆள் சொன்னான்,'முதலில் ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து கார் ஓட்ட லைசென்ஸ் பெறுவேன்.'அப்போது  அருகில் அமர்ந்திருந்த அவன் மனைவி அதிகாரியைப் பார்த்துச் சொன்னாள்,'அவர் பேசுவதைக் கேட்காதீர்கள்.அவர் அதிகம் குடிக்கும் போது இப்படி புத்திசாலி மாதிரி பேசுவார்.'பின் சீட்டிலிருந்த ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்து உளறினான்,'எனக்குத் தெரியும்,நீ இந்த திருடிய காருடன் ரொம்ப தூரம் போக முடியாது என்று.'அதிகாரிக்கு மயக்கமே வந்து விட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment