Saturday, January 8, 2011

யார் உழைப்பு?

ஒரு நாள் தனது சீடர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்  புத்தர் பிரான்.அவர்களை அழைத்து விசாரித்தார்.ஒவ்வொருவரும் தங்களால் தான் புத்த விஹாரப் பணிகள் செம்மையாக நடைபெறுவதாகக் கூறினர்.அவர்களிடம் ஒரு காலிப் பானையைக் கொண்டு வரச் சொன்ன புத்தர், அதில் ஒவ்வொருவரையும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றச்சொன்னார்.அவர்களும் அப்படியே செய்தார்கள்.பானை தண்ணீரால்  நிரம்பியது.''இப்போது சொல்லுங்கள்,யார் கொண்டு வந்து ஊற்றிய தண்ணீரால் பானை நிரம்பியது?''என்று கேட்டார் புத்தர்.பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர் எல்லோரும்.''இது போல் தான் அனைவரது உழைப்பாலும் விஹாரப் பணிகள் செம்மையாக நடக்கின்றன.''என்றார்  புத்தர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment