Saturday, January 8, 2011

சித்திரவதை

ஒருவன் மன நோய் மருத்துவ மனையில் பத்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றான்.மன நோய் குணமான உணர்வு ஏற்பட்ட பின் அவன் அந்த டாக்டரிடம் சென்று தான் குணமாகி விட்டதாக கூறினான்.டாக்டர் சொன்னார்,   'பத்து ஆண்டுகள் மருத்துவ சிகிச்சையில் இருந்து விட்டாய்.இன்னும் ஒரு பத்து நாட்கள் பொறு.அனைத்து சோதனைகளையும் ஒரு முறை நான் பார்த்து விடுகிறேன்.'பத்து நாள் சோதனைக்குப் பின் அவன் பூரண குணம் அடைந்ததாக சொல்லி அவன் மருத்துவ மனையிலிருந்து செல்லலாம் என டாக்டர் கூறினார்.பின் அவனிடம் மருத்துவ மனையிலிருந்த காலம் பற்றி என்ன நினைப்பதாகக் கேட்டார்.அவன் சொன்னான்,''மன நோயாளியாக இருந்த பத்து ஆண்டுகள் பத்து நாட்கள் போலப் பறந்து விட்டது.குணமான பின் இங்கிருந்த பத்து நாட்கள்,பத்து ஆண்டுகளைக் கழித்தது போல் சித்திரவதைப் படுத்தி விட்டது.''டாக்டரே இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment