Saturday, January 8, 2011

உமர் கயாம்

உமர் கயாம் பாரசீகக் கவிஞர்.பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்வைக் கொண்டாடியவர்.அவருடைய பொன் மொழிகளில் சில;
*நன்மையையும் தீமையும் ஒன்றாய் வாழும் இடமாக நம்மைப் படைத்துவிட்டுநாம் செய்யும் தீமைகளுக்கு நம்மை இறைவன் தண்டிப்பது நீதியாகுமா?
*நாம் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டோமா? இதை விட்டு நீங்க வேண்டும் என்று சொன்னோமா?இல்லை.நம்மை எங்கிருந்தோ இவ்வுலகில் தள்ளி,இங்கும் அங்குமாக அலைத்து இழுத்து சிறிதும் ஈவு இரக்கமின்றி நம்மை வெளியே ஏன் தள்ளி விட வேண்டும்?
* ஆசையோடு நீ,நான் என்று அடித்துப் பிடித்து சில நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அவ்வளவே.பின் நீ ஏது?நான் ஏது?
* மரணம் ஒன்றே உறுதி.ஆகவேஉலகில் யார் உயர்ந்தவன்?யார் தாழ்ந்தவன்?
*நமக்கு இருக்கும் நேரம் மிகக் குறைவு.அந்த நேரமும் விரைவாகக் கழிந்து கொண்டிருக்கிறது.வீணாகத் தத்துவ விசாரத்தில் பொழுதைப் போக்கி,வேதனையை வளர்த்துக் கொள்ளாதே.பாவம்,புண்ணியம் என்று பேசிப்பேசிக் கழிவிரக்கத்தில் அழுந்தி மாயாதே.
*இந்த உலகம் ஒரு பாழடைந்த சத்திரம்.இதில் ஏதோ வருகிறோம்.எவ்வளவு ஆற்றலுடையவராயினும் சிறிது நேரம் தான் தங்குகிறோம்.பிறகு எழுந்து போகிறோம்.எங்கே என்றா கேட்கிறாய்?யாருக்குத் தெரியும்?
*வானத்தை நோக்கிக் கை நீட்டித் தொழாதே.அங்கே உள்ளது வெறும் சூனியம் தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment