Monday, February 28, 2011

படுக்கை

கடலில் கப்பல் போய்க் கொண்டிருந்தது.திடீரென வந்த புயல் கப்பலை  பலமாக ஆட்டியது.பயணிகள் அனைவரும் பயந்து கூக்குரலிட்டனர்.ஆனால் கப்பலின் கேப்டன் மட்டும் எந்த சலனுமுமின்றி தன வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பயணிகள் அவனைப்  பார்த்து,''உனக்கு பயமாய் இல்லையா?'' என்று கேட்டனர்.
கேப்டன்: பயமா?எனக்கா? என் தந்தை  ,என் பாட்டனார்  அனைவரும் கடலில்தான் இறந்தார்கள்.
பயணி:உன் குடும்பத்துக்கு சாவைக் கொடுத்த இந்தக் கடலைப் பார்த்து உனக்கு பயமில்லையா?
கேப்டன்:எதற்காகப் பயப்பட வேண்டும்.எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே?உன் தந்தைஎங்கு இறந்தார்?
பயணி: என் தந்தை படுக்கையில் தான் இறந்தார்.
கேப்டன்:அப்படியானால் உனக்கு படுக்கையைப் பார்த்தால் பயம் இல்லையா?
பயணி: இல்லை.படுக்கை பாதுகாப்பான இடமாயிற்றே.
கேப்டன்:இருக்கலாம்.கடவுள் இல்லாத இடமே கிடையாது.அவர் அருள் கடலிலும் இருக்கலாம்;படுக்கையிலும் இருக்கலாம்.உன் தந்தை படுக்கையில் இறந்தும் கூட உனக்கு படுக்கையைப் பார்த்து பயமில்லை என்றால் எனக்கு ஏன் கடலைப் பார்த்து பயம் ஏற்படப் போகிறது?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment