Monday, February 28, 2011

தற்புகழ்ச்சி

ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தன்னைப் பற்றி ஒருவர் கூற நேரிடும்போது,அதற்கான கட்டாயம் நேரும்போது தற்புகழ்ச்சி குற்றமாகாது.  மற்ற நேரங்களில் ஒருவர் எப்போதும் தன்னுடைய சாதனைகள் என்று ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால் யாரும் அதை ரசிக்க மாட்டார்கள்.
நம் கல்வியாற்றலை அறியாதவரிடம் நம்மைப் பற்றிச் சொன்னாலும்  அதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்?நாம் சாதாரணமாகப் பேசுவதிலேயே நம் கல்வி ஆற்றல் வெளி வருமே?பின் ஏன் தற்பெருமை பேச வேண்டும்?
நம் எதிரி நம் பெருமையை உணர்ந்து தானே தூற்றுகிறான்?பொறாமையில் தானே பழிக்கிறான்?பின் ஏன் தற்பெருமை பேசி அவனுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்?
நம்முடைய செயல்கள்,நம் உழைப்பு,நம் ஆர்வம்,நம் இலக்கு ஆகியவை நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவர் களுக்கும்  காலப்போக்கில் புரிய வைத்துவிடுகின்றன.எனவே தற்பெருமை தேவையில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment