Monday, February 28, 2011

அவலம்

நீங்கள் அவலத்தில் இருக்கும்போதெல்லாம் உலகத்துக்கு உங்களை மூடிக் கொண்டு விடுகிறீர்கள்.அவலம் உங்களின் உட்புறத்தில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.எனவேதான் துன்புறும் மனிதர்கள் தற்கொலைபற்றி  எண்ணத் தொடங்குகிறார்கள்.தற்கொலை என்பது முழு அடைப்பு.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் முழுமையாகத் திறந்திருக்கிறீர்கள்.ஒருவர் மகிழ்வுடன் இருக்கும்போது அவர் கையைத் தொட்டுப் பார்த்தால்,ஒரு இதம் பரவுகிறது.அவரது கரத்தின் வழியாக ஏதோ ஒன்று உங்களிடம் வந்து சேர்கிறது.அவர் உங்களை அடைகிறார்.ஆனால் அவலத்தில் இருப்பவரின் கையைத் தொட்டுப் பார்த்தால் அவர் கை செத்ததுபோல இருக்கும்.உயிரோட்டம் இருக்காது.அன்பு,இதம் ஏதும் இருக்காது.விரைத்துப்போய் காணப்படும்.
ஏழைகள் வெளிப்படையாகவே அவலத்தில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளே நிறைவேறவில்லை.பணக்காரகளும் பரிதாபமாகவே இருக்கிறார்கள்.செல்வம் கொண்டாட்டத்துக்கு இட்டுச்செல்ல முடியும்.ஆனால் கொண்டாடும் மனநிலை அவர்களிடம் இல்லை.ஏழை அவலத்தில் இருக்கிறான்.பணக்காரன் அதிக அவலத்தில் இருக்கிறான்.உடனே,''உலகில் ஒன்றுமில்லை;செல்வம் பயனற்றது''என்ற முடிவுக்கு வருகிறான்.உண்மை அப்படி  அல்ல.அவனால் மனத்தால் கொண்டாட முடிவதில்லை.
நரகமும் மோட்சமும் புவியியல் பிரதேசங்கள் அல்ல.மன நிலைகளே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment