Monday, February 28, 2011

என்ன சந்தேகம்?

நூறு வயது முடிந்த ஒருவருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடந்தது.விழாவுக்கு வந்திருந்த ஒரு செய்தித் தாளின் நிருபர் அவரிடம் நூறு வயது வரை உற்சாகத்துடனும்,உடல் நலத்துடனும் அவர் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார்.பிறகு அவரிடம் விடை பெறும்போது,  ''அடுத்த தங்களின் நூற்றியோராவது பிறந்த நாள் விழாவிலும் நான் தங்களை  சந்திப்பேன் என நம்புகிறேன்,''என்றார்.அந்தக் கிழவர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''தங்களுக்கு இப்போது முப்பது வயது தானே இருக்கும்.அதற்குள் என்ன சந்தேகம் உங்களுக்கு வந்தது,நீங்கள் என்னை அடுத்த வருடம் வந்து பார்ப்பதில்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment