Monday, February 28, 2011

சோம்பேறி

யாராவது நம்மைப் பார்த்து,'சோம்பேறி'என்று சொன்னால் நாம் அதனால் பாதிக்கப் படுகிறோம்.''நான் சோம்பேறி கிடையாது,''என்பது நமக்குத்  தெளிவாகவும் உறுதியாகவும் தெரிந்தால் பிறர் நம்மைப் பார்த்து சோம்பேறி  என்று சொல்வது வெறும் பிதற்றல் ஆகத் தெரியும்.அது நம்மை ஒருபோதும் பாதிக்காது.அப்படி பிதற்றுகிறவனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.அப்படியானால் சோம்பேறி என்று சொன்னவுடனே  சிலர் பாதிப்படைகிறார்களே,அது ஏன்?சோம்பேறி என்று ஒருவர் சொன்னதை திட்டப்பட்டவர் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அவருக்கு கோபம் வருகிறது.இன்னும் சொல்லப்போனால்,பிறர்,சோம்பேறி என்று திட்டும்போது,சிலர் அந்த திட்டலுக்கு வருந்துவதைவிடத் தான் சோம்பேறி என்பதை மற்றவர் அறிந்து கொண்டனரே,அந்த உண்மையை எல்லோர் முன்னாலும் சொல்லி விட்டனரே என்பதற்காகவே வருந்துகின்றனர். யார் என்ன சொன்னாலும் நம்மைப் பற்றி நமக்கு தெளிவான கருத்து இருக்கும் வரை அது நம்மை பாதிக்காது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment