Monday, February 28, 2011

தெரியாமல்

ஒருவர் ஒரு அலுவலகம் செல்ல மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.எதிரே வந்த ஒருவர் திடீரெனக் கத்தினார்,''என்ன அய்யா,இப்படி மிதித்துவிட்டு ஒன்றுமே நடவாததுபோலச் செல்கிறீர்கள்?''முன்னவர் சொன்னார்,''தெரியாமல் நடந்துவிட்டது.மன்னித்துக் கொள்ளுங்கள்.''உடனே மிதிபட்டவர் சீறினார்,''மன்னிப்புக் கேட்டு விட்டால் என் காலில் உள்ள வலி போய்விடுமா?''அவர் சொன்னார்,''நான் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?வேண்டுமானால் நீங்களும் அதே போல என்னை மிதித்து விடுங்கள்.ஆனால் ஒன்று,நான் உங்களைத் தெரியாமல் தான் மிதித்தேன்.அதுபோல நீங்களும் என்னைத் தெரியாமல் தான் மிதிக்க வேண்டும்.''மிதிபட்டவருக்கு மேற்கொண்டு  என்ன பேசுவதென்று  தெரியவில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment