Sunday, March 13, 2011

பொன்மொழிகள்

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி
ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னையறியாமல் தவறு செய்து,
தன்னையறிந்து திருந்தி கொள்கிறவனே மனிதன்.
கண்ணதாசன்.

'நேரத்தைத் தள்ளிப் போடாதே;தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.'
-ஷேக்ஸ்பியர்

மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னேஎந்த ஒரு ஆணும் குழந்தையாகி விடுவான்!
–தாகூர்.

தோல்வி குற்றம் கிடையாது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும்.
- ஜேம்ஸ்ரசல்.

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும்.
- சாலமன்.

துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.
- ஜார்ஜ் பெய்ஷி.

அப்துல்கலாமின் பத்து கட்டளைகள்
பள்ளி மாணவ-மாணவியர் ஏற்க வேண்டிய 10 உறுதிமொழிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்துகிறார்!!!


1. நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாக உழைத்து படித்து, வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முயல்வேன்.

3. எனது விடுமுறை நாள்களில், எழுதப் படிக்கத் தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.

4. எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.

5. மது, சூதாடுதல், போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த முயல்வேன்.

6. துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.

7. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.

8. வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

9. என் தாய், தாய்நாட்டை நேசித்து, பெண் குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.

10. நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment