Saturday, April 9, 2011

தட்டில் & இலையில் சாப்பிடுவதின் பயன்கள்!



தங்க தட்டில் சாப்பிடுவதின் குணம்

தங்கத் தட்டில் சாப்பிடுவது தோஷங்களைப் போக்கும்.உடம்பைத் தேற்றும்.இதமானது.

***

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால்

கண்களுக்கு நலம்.பித்ததைப் போக்கும்.கபம் வாயுவை இவைகளை உண்டாக்கும்.

***

வெங்கலத்தட்டில் சாப்பிட்டால்

புத்தியை வளர்க்கும்.உணவின் சுவையைக் கூட்டும்.பித்ததைத் தெளிவுபடுத்தும்

***

இரும்பு கண்ணாடிப் பாத்திரங்களில் சப்பிடுவதால்

சித்தியைக் கொடுகிறது.வீக்கம்,சோகை,இவைகளைப் போக்குகிறது. காமாலையைப் போக்குவதில் சிறந்தது. வலிமையைக் கொடுகிறது.

***

வாழை இலையில் சாப்பிடுவதால்

உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும் விஷதோஷத்தைப் போக்கும். ஆண்மையை வளர்க்கும்.உணவின் சுவையை மிகுவிக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை உண்டாக்கும்.உடம்புக்கு நல்ல ஒளியை உண்டாக்கும்.

***

பூவரச இலையில் சாப்பிடுவதால்

வாயு ,கபத்தைப் போக்கும்,பசியைத் தூண்டும்.வயிற்றில் உண்டாகும் கட்டி போன்ற நோய்களைப் போக்கும். உணவின் சுவையைக் கூட்டும்.

***

பலா இலையில் சாப்பிடுவதால்

பலா இலையில் சாப்பிடுவது சிறந்தது.சுவையை உண்டுபண்ணுகிறது.வாயு கபம் இவைகளைக் குறைக்கின்றது.உடம்பைத் தேற்றுகின்றது.பசித்தீயைத் தூண்டுகிறது.

***

ஆல்,அத்தி,இத்தி,அரசு இலைகளில் சாப்பிடுவதால்

இவ் இலைகளில் சாப்பிடுவது சிரமமானது. ஆனால் குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறது.தண்ணீர் தாகம்,எரிச்சல்,பித்தம் இவைகளைப் போக்குகிறது.புத்தியை வளர்க்கிறது.வாயு ,கபம் இவைகளை உண்டாக்குகிறது.

***

சாப்பிட கூடாத இலைகள்

தாமரை இலையில் சாப்பிடுவது,விரும்பதக்கதல்ல.அதில் சாப்பிடுவதால் வாயு தொல்லை ஏற்படும்.பசித்தீயை அணைத்துவிடும்.வறட்சியை உண்டாக்கும்.அழகைக் குறைக்கும்.


***


பிளாஸ்டிக் பாத்திரத்தில் சாப்பிட்டால்......


***

thanks- by முனைவர் கல்பனாசேக்கிழார்.
http://www.sekalpana.com/2009/05/blog-post.html

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment: