Saturday, April 9, 2011

கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...



1. கண்தானம் செய்வதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என வயது வரம்பின்றி யாரும் மரணத்துக்குப் பின் கண்தானம் செய்யலாம்.

*

2. கண் புரை அறுவை சிகிச்சை செய்தவராக இருந்தாலும் கண் தானம் செய்யலாம்.

*

3. கண்ணாடி அணிந்திருப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம். ஆனால் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி ஆகிய நோயால் இறந்தவர்களின் கண்களைப் பயன்படுத்த முடியாது.

*

4. இறந்தவுடன் 6 முதல் 8 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்தால்தான் அடுத்தவர்க்குப் பொருத்த முடியும்.

*

5. கண்தானம் செய்ய பதிவு செய்தவர் இறந்தால், அவரது உடலுக்கு மேலே மின்விசிறி இயங்கிக் கொண்டிருக்குமேயானால், அதை நிறுத்தி விடுங்கள்.

*

6. இறந்தவரின் கண்கள் மீது நீரில் நனைக்கப்பட்ட பஞ்சை வைக்க வேண்டும்.

*

7. கண்களை எடுப்பதால் இறந்தவரின் முகம் விகாரமாகி விடும் என்பது அறியாமையே.

*

8. கண்தானம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே கண் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.


***

நன்றி "கீற்று"

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment