Saturday, April 9, 2011

அஸ்துமாவை கட்டுப்படுத்தும் வழிகள்!

அறிவியல் முன்னேற்றம் காரணமாக மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கான தகுந்த சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஒரு சில நோய்கள் வேண்டுமானால், விதி விலக்காக இருக்கலாம். எவ்வித நோய்களாக இருந்தாலும், அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளே சிகிச்சையின் மூலம்.

***


ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இதோ:



1. தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் மட்டுமே வசிப்பது அவசியம்.

*

2. தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நன்மை தரும்.

*

3. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு வகைகள், மீன் வகைகளில் அதிக கொழுப்பு உள்ள சுரா, கெளுத்தி, மடவை, கானாங்கத்தை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*

4. குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகள் குறிப்பாக வெண்பூசணி, சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பதார்த்தங்கள், தயிர் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளிப்பு உள்ள திராட்சை போன்ற பழ வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

*

5. அதிக காரமும் அதிக புளிப்பும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

*

6. எளிதில் ஜீரணமடையும் உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும்.

*

7. மூச்சு விடுதல் சிரமம் என்பதால், வயிறு முட்ட உண்ணுதல் கூடாது.

*

8. இரவு உணவு சாப்பிடுவதை 7 மணியளவில் வைத்துக்கொள்வது சிறந்தது.

*

9. கீரை வகைகளில் தூதுவளை, முருங்கக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, சுண்டக்காய், சுண்ட வத்தல் ஆகியவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியம் தரும்.


*

10. இவை குறிப்பாக ஆஸதுமா நோய்க்கு மூல காரணமான சளியை அகற்றுகிறது.



***


ஆஸ்த்மாவிலிருந்து விடுதலை:


1. இயற்கை உணவை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா போன்ற நோய்கள் வராது என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

*

2. யூகே, கிரீஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நிகழ்த்திய இந்த ஆய்வின் முடிவில் நகரப்புறங்களில் ஆஸ்த்மா நோய்கள் அதிகம் இருப்பதாகவும், இதற்குக் காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதும் தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

*

3. செல்லப் பிராணிகளின் மூலமாகவும் ஆஸ்த்மா நோய்க்கான அலர்ஜி குழந்தைகளைப் பிடிப்பதுண்டு.


*

4. ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடான யூ. கேடில் பிறக்கும் குழந்தைகளில் பத்து பேருக்கு ஒருவர் ஆஸ்த்மாவினால் பாதிக்கப் படுகிறார்களாம்.

*

5. உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றியமைப்பத மூலம் ஆஸ்த்மாவை விரட்டலாம் எனும் இந்த ஆராய்ச்சி அந்த மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

*

6. ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து உண்டு வரும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா நோயே வருவதில்லையாம். அவர்களுக்கு ஆஸ்த்மா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சத்தி உருவாகி விடுகிறதாம்.

*

7. சிகப்பு திராட்சையை உண்ணும்போது அதன் தோலுடன் சேர்த்து உண்ண வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

*

8. முந்திரி, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

*

9. நோயற்ற வாழ்வுக்கு மருத்துவரை நாடாமல் காய்கறி, பழக் கடைகளை நாட அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.



***
thanks அனு

***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment