Saturday, April 9, 2011

இரத்தத்தில் சர்க்கரை அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று......

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாய் இருப்பதாக ஐரோப்ப ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.



சர்க்கரை நோயோ, அதிகமாக இனிப்பு வகைகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.

*

இப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையினால் பெண்களுக்கு கருப்பை, தோல் போன்ற பல இடங்களில் புற்று நோய் வரும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.

*

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதற்கும் இந்த இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒரு காரணம் என்று உமேயா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

*

அதுவும் 49 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.

*

கடந்த பதிமூன்று வருடங்களாக இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், பல ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

*

இனிப்பான எல்லாமே இனிப்பான செய்தியைத் தராது என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது !

***
by-சத்தியா

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment