Saturday, April 9, 2011

சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார்

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களிலுள்ள விழித்திரை பாதிப்படைந்து பார்வை மங்கிப் போகலாம்.




அதிகபட்சமாக பார்வையிழப்பும் ஏற்படக்கூடும். இந்தப் பிரச்னை இரு வகை சர்க்கரை நோயாளிகளுக்கும் வரக் கூடும்.

*
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு விழித்திரைப் பகுதியில் ஓடும் ரத்தக் குழாய்கள் வீக்கமடைகின்றன அல்லது விரிவடைகின்றன; கசிவு ஏற்படுகின்றன அல்லது தேவையற்ற புதிய ரத்தக் குழாய்கள் ஏற்படுகின்றன.

*

அதனால் விழித்திரை மறைக்கப்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் " டயாபடிக் ரெட்டினோபதி ' என்று பெயர்.

*

ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் தெரியாது. வலியோ பார்வை மங்குவதோ இருக்காது. முற்றிய நிலையில் பார்வை மங்கத் தொடங்கிவிடும்.

*

எனவே, கண் மருத்துவரை ஆண்டுக்கொரு முறையாவது சந்தித்து கண்பரி சோதனை செய்து கொள்வது அவசியம். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடகளிலும் இந்ப்பிரச்னை அதகமாக உள்ளது.

*

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த ரெட்டினோ பதி எனும் கண் கோளாறு பற்றி இந்தியாவில் இன்னும் முறையான கணக் கெடுப்பு நடத்தப் படவில்லை.

*

ஆகவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் விழித்திரை நன்றாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். விழித்திரை பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை நவீன கருவிகள் மூலம் மிக எளிதில் கண்டுபிடித் துவிடலாம்.

*

விழித்திரை பாதிப்பைச் சீர்படுத்த பல் வேறு சிகிச்சைகள் உ ள்ளன. உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். விட்ரக்டமி எனப்படும் அறுவைச் சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்.

*

எனவே, சர்க்கரை நோயாளிகள், கண் மீது எப்போதும் ஒரு கண்வைத்திரப்பது நல்லது. அடிக்கடி கண் மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து கொண்டால் விழித்திரை பாதிப்பால் பார்வை மங்கா மலும் அல்லது பார்வை பறிபோகாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.


***
நன்றி தினமணி!
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment