Monday, January 10, 2011

பொறுமையாக யோசி

மூத்தாள் மகனை இளையாள் வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்து கொண்டிருந்தாள்.பரிதாபப்பட்ட கணவனிடம் அவள் சொன்னாள்,''நான் ஒரு காரியம் சொல்வேன்.அதை அவன் செய்து விட்டால் என் பிள்ளை போல வைத்துக் கொள்வேன்.இல்லையெனில் வெளிய துரத்தி விடுவேன்.நம் வீட்டிலிருக்கும் ஆடுகளை சந்தைக்குக் கொண்டு போய் விற்க வேண்டும். ஆனால் நமக்கு உணவு வாங்குகிற அளவுக்கு மேல் பணம் வரக் கூடாது.வேறு எந்த செலவும் செய்யக் கூடாது.மீதிப் பணமும் இருக்கக் கூடாது.ஆடுகள் திரும்ப வர வேண்டும்.இது தான் நான் சொல்லும் வேலை.''
தகப்பனுக்குத் தலை சுற்றியது.இது மகனை ஒரேயடியாக விரட்டும் வழி என்று தோன்றியது.விற்ற ஆட்டை எப்படி வீட்டுக்குக் கொண்டு வருவது?இருக்கும் ஆடுகளை விற்றால் ஒரு மாத உணவுக்குப் பணம் கிடைக்குமே?மூவருடைய சாப்பாட்டுக்கு வரும் அளவிற்கு எப்படி விற்பது?
மகன் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு யோசித்துக் கொண்டே சந்தைக்குப் போனான்.திடீரென ஒரு யோசனை.அதன் படி செய்தான் வெற்றியும் கண்டான்! அப்படி என்ன செய்தான்?
ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய்,சந்தையில் அவற்றின் கம்பளியை  மட்டும் மூவரின் உணவுத் தேவைக்கு வரும் அளவிற்குக் கத்தரித்து அதை விற்று மூவருக்கு உணவு வாங்கிக் கொண்டு,கையில் பணம் ஏதும் மீதமில்லாமல் ஆடுகளையும் அழைத்துக் கொண்டு திரும்ப வந்தான்.
பொறுமையாக யோசித்தால் எந்த சோதனையையும் சந்திக்கலாம்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment