Monday, January 10, 2011

பெறுமானம்

தன நாட்டையும் செல்வத்தையும் குறித்து மிகவும் கர்வம் கொண்டிருந்த ஒரு அரசன் ஒரு ஞானியைப் பார்க்க சென்றிருந்தார்.அவரைப் பற்றி நன்கு அறிந்த ஞானி அவரை வரவேற்றபின் பேச ஆரம்பித்தார்.
ஞானி ;நீங்கள் ஒரு பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள்.கடுமையான தாகம்.எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.தாகத்தால் நாவறட்சி.அப்போது ஒருவன் ஒரு அழுக்குப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக்  கேட்டால் என்ன செய்வீர்கள்?
அரசன்; சந்தேகம் என்ன?தண்ணீரை வாங்கி பாதி நாட்டைக் கொடுப்பேன்.
ஞானி;  சரி,அந்த அழுக்கு தண்ணீரைக் குடித்ததால் வியாதி வந்து யாராலும் குணப்படுத்த முடியாத நிலையில்,யாராவது ஒருவர் அதைக் குணப்படுத்தும் மூலிகையைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மீதி நாட்டையும் கேட்டால் கொடுப்பீர்களா?
அரசன்; கட்டாயம் மீதி நாட்டைக் கொடுத்து மூலிகையைவாங்குவேன்.
ஞானி;  அப்படியானால்,கேவலம் ஒரு பாத்திர அழுக்கு நீரும்,ஒரு  மூலிகைச் செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து  உங்களுக்கு ஏன் கர்வம்?
அரசன் வெட்கத்தினால் தலை கவிழ்ந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment