Tuesday, March 1, 2011

பிறர் கவனம்

மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன்?'நீ புத்திசாலி,நீ நல்லவன்,'என்று புகழ்ச்சியான சில வார்த்தைகளைக் கேட்பதற்குத்தான். 'நீ முட்டாள்,எதற்கும் லாயக்கில்லாதவன்'என்பது போன்ற அவச்சொற்களை வாங்கி விடக் கூடாது என்பதற்காகவும்தான்.
புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சியடைகிறோம்.இகழ்ச்சியான வார்த்தைகளுக்கு கோபமும்வெறுப்பும் கொள்கிறோம்.இப்படி பலர் நமக்குக் கொடுத்த மதிப்பெண் பட்டியலை வைத்து வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அதனால் நம் வாழ்க்கை,நம் மகிழ்ச்சி நம் கையில் இல்லை.போலித்தனமான வாழ்க்கை வாழ்கிறோம்.
நீ மோசமானவன் என்று யாராவது சொன்னால்,அது உண்மைதான் என்று  உடனே கோபப்பட்டோ,நொந்துபோயோ  நாம் நிரூபித்து விடுவோம்.
கணவனும் மனைவியும்,மாமியாரும் மருமகளும்,காதலனும் காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.காரணம்,இது போன்ற சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு ஏற்படாமல் காத்துக் கொள்கிறது.சண்டையின் மூலம் மேலும் மேலும் ஒருவர் மீது இன்னொருவர் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள்.
நூறு பேர் ஒருவரை கவனித்தால் தெருவில் அவர் ஒரு முக்கியமான ஆள்.ஆயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு பிரமுகர்.பத்தாயிரம் பேர் கவனித்தால் அவர் மிக முக்கியமானவர்.ஐம்பதாயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு தலைவர்.
மற்றவர்களின் நன் மதிப்பை பெறுவது மட்டுமே நோக்கமாக இருக்கும்போது, அதற்காகவே வாழ ஆரம்பிக்கும்போது  அவர்கள் தங்களை வருத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.விளைவு,நல்ல பெயர் கிடைத்தாலும் திருப்தி அடைவதில்லை.தன ஆற்றலை வளர்த்துக் கொள்ள அக்கறை பிறக்காதவரை அடுத்தவர்களுக்காக நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
''நான் என் சுதந்திரத்தை இழக்க மாட்டேன்,மற்றவர்களின் நல்ல,கெட்ட  ஒப்புதல்களால் பாதிக்கப் படாத அளவுக்கு சிறந்த முதிர்ச்சியைப் பெறுவேன்,''என்ற அக்கறை பிறக்கும்போது நீங்கள் ஒப்பற்ற மனிதர் ஆகி விடுவீர்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment