Tuesday, March 1, 2011

பட்டுக்கோட்டையார்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சிறந்த கவிஞர்.அவர் பாடல்கள் எளிமையானவை.சிந்தனைக்கு விருந்தாகும் பல பாடல்களை திரைப் படங்களுக்காக எழுதி உள்ளார்.ரசித்த சில பகுதிகள்:
**********
ஆயுள் காலம் மனிதர்களுக்கு ,அமைப்பிலே ஒரு நூறடா.
அரையும் குறையாய்ப் போவதெல்லாம் அறிவும் செயலும்  ஆமடா.
மாயவானாம் குயவன் செய்த மண்ணுப் பாண்டம் தானடா- இது
மத்தியில் உடையாதபடி நீ மருந்து மாயம் தின்னடா.
**********
அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் ஆண்டவன் கூட அஞ்சிடுவான்.
அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்,பிறவிக் குருடனும்  கண் பெறுவான்.
**********
காலொடிந்த ஆட்டுக்காகக் கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளம் கொண்ட காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு திருந்த வழி சொன்னதுமுண்டு.
காதில் மட்டும் கேட்டு அதை ரசித்தாங்க-ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க.
**********
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு.
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு.
**********
நீதியின் எதிரிகளாய் நிலை மாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை,பரமனையும் மதிப்பதில்லை.
**********
நாளை நாளை என்று பொன்னான நாளைக் கெடுப்பவன் குருடன்.
நடந்து போனதை நெனைச்சு ஒடம்பு நலிஞ்சு போறவன் மடையன்.
நம்மைப்போலக் கெடைச்சதைத்  தின்னு நெனைச்சதைச் செய்யிறவன் மனிதன்.
**********
வசதி இருக்கிறவன் தர மாட்டான்.-அவனை
வயிறு பசிக்கிறவன் விட மாட்டான்.
**********
எழுதிப் படிச்சு அறியாதவன் தான் உழுது ஒளச்சுச் சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி நல்லா நாட்டைக்கூறு போடறான்.
**********
சித்தர்களும் யோகிகளும்,சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க,என்ன பண்ணிக் கிழிச்சீங்க?
**********
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங்கூட்டிருக்குது கோனாரே-இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே!
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment