Tuesday, March 1, 2011

நம்பிக்கை

''மனிதர்கள் என்னிடம் கூறுவதில் பாதிதான் உண்மை என நான் நம்புகிறேன்.''
'ஏன்?'
''நான் ஒரு வழக்கறிஞர்.''
/மற்றவர்கள் கூறுவதில் இரு மடங்கு உண்மை இருப்பதாக நான் நம்புகிறேன்.'
''எதனால் அப்படி?''
'நான் ஒரு வருமான வரி அதிகாரி.'
**********
வேடிக்கை
''அப்பா,இந்த நீரில் மீன் குதித்து விளையாடுவது நல்ல வேடிக்கை.''
'அது அல்ல மகனே உண்மையான வேடிக்கை.அவை குதித்து விளையாடும் நீரிலேயே கொதித்துக் குழம்பாகிறதே அதுதான் வேடிக்கை.'
**********
பஸ்ஸில் ஒருவன்:ஏனையா,செருப்பை வைத்து நன்றாக என் காலில் மிதித்துவிட்டு,சாரி சொல்கிறாயே?
பதில்:மிதிக்காமல் சாரி சொல்ல முடியாதே?
**********
''உன்னை ஏன் வேலை நீக்கம் செய்தார்கள்?''
'மாவட்டக் கலெக்டர் வருகை,என எழுதுவதற்குப் பதிலாக,மாவாட்டக் கலெக்டர் வருகை என எழுதி விட்டேன்.'
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment