Tuesday, March 1, 2011

தலைவலி

ஒரு நாவலாசிரியர் ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட்ட கையெழுத்து பிரதியை எடுத்துக் கொண்டு ஒரு பிரசுரகர்த்தரைப் பார்க்கப்போனார்.அவரிடம் தன நாவலின் தனித்தன்மையைப் பற்றி விலாவாரியாகப் பேசினார்.தன கதா பாத்திரங்களைப் பற்றி பெருமையாகப் பேசினார்.மேலும் அவர் சொன்னார்,''சொன்னால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.எனக்கு இங்கு வரும்போது கடுமையான தலைவலி இருந்தது.என் நாவலைப் பற்றி உங்களிடம் பேசியதில் அந்த தலைவலி போன இடம் தெரியவில்லை.''  பிரசுரகர்த்தர் சொன்னார்,''அந்த தலைவலி வேறு எங்கும் போகவில்லை.என்னிடம் வந்துவிட்டது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment