Tuesday, March 1, 2011

அறிவில்லாதவன்

ஒரு புலவர்,தன மகனைப் பார்த்து,'அறிவில்லாதவனே,'என்று திட்டினார். அவனோ சிரித்துக் கொண்டேஇருந்தான்.புலவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.''நான் உன்னை அறிவில்லாதவன் என்று கூறியும் கொஞ்சம் கூடவெட்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாயே?''என்று கேட்டார்.மகன் சொன்னான்,''நீங்கள் என்னைப் பாராட்டும்போது எனக்கு எப்படிக் கோபம் வரும்?''புலவருக்கு திகைப்பு.மகன் சொன்னான் ,''அப்பா,நீங்கள்  ஒரு புலவர்.நீங்களே என்னை அறிவில் ஆதவன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியே.''

யார் வாழ்ந்தார்?
கோவில் குருக்கள் சொன்னார்,
''திரு நீறிட்டார் தாழ்ந்தார்.இடாதார் வாழ்ந்தார்.''
கேட்டவர் திகைத்தார்.குருக்கள் விளக்கம் சொன்னார்,
''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்?இடாது யார் வாழ்ந்தார்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment