Tuesday, March 1, 2011

இருமல்

வயதான ஒருவர் ஒரு கிளி வளர்த்து வந்தார்.அவர் சிகரெட் மிக அதிகமாகக் குடிப்பார்.அந்தக்கிளி மிக அதிகமாக இருமிக் கொண்டிருந்தது.சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்டு,அந்தக் கிளி இருமுகிறது என்று முடிவுக்கு வந்தார்.அது படும் சிரமத்தைக் காணச் சகியாது,பறவைகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவரை அழைத்து வந்தார்.அவரும் எல்லா சோதனைகளும் செய்து பார்த்துவிட்டு கிளி எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என்றார்.பின் கிளியின் தொடர்ந்த இருமலுக்கு காரணம் என்ன என்று யோசித்தபோதுதான் தெரிந்தது:கிளியின் சொந்தக்காரர் அதிகமாக சிகரெட் குடித்து இருமிக் கொண்டே இருந்ததனால்,அதைப் பார்த்து கிளி தன எஜமானனின் செயலை அப்படியே திரும்ப செய்து கொண்டிருந்திருக்கிறது.சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது சரிதானே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment