Wednesday, February 23, 2011

வெற்றியின் ரகசியம்

அலெக்சாண்டர் ஒரு முறை படையெடுப்பின் போது,பதினோரு நாளில் 3300  பர்லாங் தூரம் தன படைகளை அழைத்துச் சென்றிட வீரர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதிலும் குடிக்க சிறிதும் தண்ணீரே இல்லாத சூழ்நிலையில் மிகவும் களைப்புற்று மேற்கொண்டு செல்ல விருப்பமில்லாதிருந்தனர்.அலெக்சாண்டருக்கு அவர்களை எப்படி சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்வது என்று யோசனை.அப்போது அவருடைய மெய்க்காப்பாளன் ஒருவன் எங்கிருந்தோ ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.அவருக்கும் தாகம் அதிகம் இருந்ததால் குடிக்கலாம்என்று எண்ணியபோது சுற்றிலுமிருந்த வீர்களின் முகங்களைப் பார்த்தார்.அவர்கள் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே அவர் நீரைக் குடிக்காது  திரும்பக் கொடுத்தார்.எல்லோரும் வியப்புடன் அவரை பார்க்கையில் அவர் சொன்னார்,''நான் மட்டும் நீரை அருந்தினால் மற்றவர்கள் மனமுடைந்து விடுவர்.மேலும் அது நியாயமுமில்லை.''அவருடைய பெருந்தன்மையைக் கவனித்த வீரர்கள் உடனடியாக தங்கள் களைப்பையும் தாகத்தையும் பொருட்படுத்தாது,குதிரைகளில் ஏறிப் புறப்பட்டனர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment