Wednesday, February 23, 2011

கண்ணோட்டம்

உண்மைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.இவை அவற்றை விளக்குவதைப் பொறுத்தே இருக்கிறது.ஒரே உண்மை ஆயிரத்தொரு விதத்தில் விளக்கிச் சொல்லப்படலாம்.அதைத்தான் நாம் எல்லோரும் செய்து கொண்டிருக்கிறோம்.இல்லாவிடில்,இத்தனை மதங்கள்,இத்தனை தத்துவங்கள்,கொள்கைகள் தேவையில்லையே?சில உண்மைகளை வேறு விதமாக மட்டுமல்ல,நேர் எதிரான வகையிலும் எடுத்துக் கூறப்படலாம்.
மகாவீரர் தன வாழ்நாள் முழுவதும் நிர்வாணமாக வாழ்ந்தார்.ஒருவர் சார்ந்து நிற்கக்கூடிய எந்தப் பொருளையும் அவர் பயன் படுத்தவில்லை.அவர் தன முடியைக் கரங்களாலே பிடுங்கி விடுவார்.அவர் குளிப்பதில்லை.அவரது கண்ணோட்டத்தின்படி குளிப்பது என்பது உடலை அலங்கரிப்பதாகும்.
இந்த மகாவீரரின் குணாதிசயங்களை சிக்மன்ட் பிராய்டின் கண்ணோட்டத்தில் பார்த்தால் மகாவீரர் ஒரு மனோ வியாதியஸ்தர்.நிர்வாணமாக இருப்பதும் முடியைப் பிடுங்கிக் கொள்வதும்,  குளிக்காமல் இருப்பதும் மன நோயாளியின் குணாதிசயங்கள்.மகாவீரர் இந்த வகையைச் சேர்ந்த மன நோயாளியா?உண்மை தனியாகப் பார்க்கப் படும்போது  அதில் மதிப்பீடுகள்  ஏதும் இல்லை.நீங்கள் அதைப் பற்றி எண்ணும்போது விளக்கங்கள் உருவாகின்றன.அவ்விளக்கங்கள் உங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்து அமைகின்றன.அவற்றிற்கும் உண்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment