Wednesday, February 23, 2011

யாருக்காக அழ?

குடியானவன் ஒருவன் தன அன்பு மனைவியுடன் ஒரு ஊரில் வசித்து வந்தான்.அவன் ஒரு ஞானி.நீண்ட நாள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
ஒரு நாள் குடியானவன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போதுஅவனது நண்பன் ஒருவன் வந்து குடியானவனின் குழந்தைக்கு காலரா கண்டிருப்பதாக பதட்டத்துடன் வந்து சொன்னான்.குடியானவன் உடனே வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு விரைந்தான்.குழந்தை இறந்து விட்டது.அவன் மனைவி மற்றும் உறவினர்கள் தாங்கொணாத துயரத்துடன் கதறி அழுதனர்.ஆனால் குடியானவனின் முகத்தில் மட்டும் பாதிப்பு ஏதும் தெரியவில்லை.மற்றவர்களிடமும் அவன்,''வருந்தி என்ன ஆகப் போகிறது?வருத்தப்படாதீர்கள்,''என்று கூறினான்.அது மட்டுமல்ல;அவன் வயலுக்கு சென்று விட்ட வேலையைத் தொடர்ந்து முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பினான்.அப்போதும் அமைதியாக இருந்த அவனைக் கண்டு அழுது புலம்பிக் கொண்டே அவனைப் பார்த்து அவன் மனைவி ,'நீ ஒரு கல் நெஞ்சுக்காரன்.இதயமே இல்லாதவன்.மகன் இறந்ததற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் இருக்கிறாயே?'என்று திட்டினாள்.குடியானவன் சாவகாசமாக அமர்ந்துகொண்டு அமைதியாகப் பதில் சொன்னான்,''நேற்றைய இரவு நான் ஒரு புதுமையான கனவு கண்டேன்.அந்தக் கனவில் நான் ஒரு அரசனாகவும்,நீ அரசியாகவும் இருந்தோம் நமக்கு எட்டுக் குழந்தைகள்.நாம் மகிழ்ச்சியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தோம்.பிறகு தூக்கம் கலைந்து விட்டது. விழிப்பு வந்தது அந்த எட்டுக் குழந்தைகளில் ஒருவரைக்கூடக்  காணோம்.அரசாட்சியும் நமக்கில்லை என்று தெரிந்தது.பிறகு அது ஒரு கனவு என்று மட்டும் புரிந்தது.இப்போது என் எண்ணமெல்லாம்,அந்த நம்முடைய எட்டுக் குழந்தைகளுக்காக அழுவதா அல்லது இப்போது பறிகொடுத்திருக்கும் ஒரு குழந்தைக்காக அழுவதா என்பதுதான்.''
ஞானிகள் இறந்து போனவர்களைக் குறித்தோ இருப்பவர்களைக் குறித்தோ துன்பப் பட மாட்டார்கள்.
                                                     --பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment