Tuesday, April 5, 2011

வாயில் துர்நாற்றத்தைத் துரத்த....

கடந்த ஒரு வருடமாக வாயில் துர்நாற்றமடிக்கிறது.​ வாயில் ஊறும் எச்சிலைத் துப்ப இரவில் இரண்டு அல்லது மூன்றுமுறை எழுந்திருக்க வேண்டியுள்ளதால் தூக்கமும் கெடுகிறது.​ பற்களில் கறையும் மஞ்சள் நிறமும் படர்ந்துள்ளது.​ கடந்த ஏழு வருடமாக வெளியூரில் தங்கி ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில்தான் சாப்பிடுகிறேன்.​ இந்த உபாதைகள் நீங்க வழி என்ன?

ச.ஸ்ரீநிவாஸ்,​​ குமாரபாளையம்.



துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை பித்ததோஷ சீற்றத்தின் தனி வெளிப்பாடே என்று ஆயுர்வேதம் உறுதிபடக் கூறுகிறது.​

*

கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளிலிருந்து உங்களுக்குப் பித்த ஊறல் அதிகமாக உள்ளதை இவை காட்டுகின்றன.​

*

இரவில் இட்லி சாம்பார் சட்னியுடன் சாப்பிடும் நபர்களுக்கு,​​ அதிலுள்ள உளுந்து சீரணமாவதன் வாயிலாக,​​ இந்தத் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஏற்படக் கூடும்.​

*

உங்களைப் பொறுத்தவரை,​​ இரவில் புழுங்கலரிசிக் கஞ்சி அல்லது புழுங்கலரிசி கஞ்சியுடன் மோர் கலந்து சாப்பிடுவதே நல்லது.​ பச்சரிசி வேக வைத்த சாதத்துடன் பால் கலந்து சாப்பிடுவதும் நல்லதே.​ இவை அனைத்தும் பித்த ஊறலைக் கட்டுப்படுத்தும் நல்ல உணவு வகைகளாகும்.

*

""பித்தே திக்த:​ ததஸ்வாது:​ கஷாயஸ்ச ரúஸôஹித:'' என்கிறார் வாக்படர் எனும் ஆயுர்வேத முனிவர்.​

*

பித்த ஊறலைக் கட்டுப்படுத்துவதில் கசப்புச் சுவைதான் சிறந்தது,​​ அதற்கு அடுத்ததாக இனிப்பும்,​​ அடுத்தபடியாக துவர்ப்புச் சுவையும் சிறந்தவை என்று அதற்கு அர்த்தமாகும்.

*

ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில் கசப்புச் சுவை கொண்ட உணவு வகைகளான மணத்தக்காளிக் கீரை,​​ வெந்தயக் கீரை,​​ பாகற்காய்,​​ சுண்டைக்காய் என்றெல்லாம் சமைத்துப் போட்டால் அங்கு யாரும் வரமாட்டார்கள்.​

*
வியாபாரமும் படுத்துவிடும்.​ உங்களுக்கோ சமைப்பதற்கு நேரமுமில்லை.​ இப்படி இக்கட்டான நிலையில் உள்ள உங்களுக்கு,​​ முனிவரின் உபதேசத்தை எப்படிப் பயன்படுத்த முடியும்?​ அதற்கு ஒரு வழி இருக்கிறது.​

*

சுவையில் கசப்பான வேர் கொண்ட விலாமிச்சை,​​ வெட்டிவேர் மற்றும் சந்தனத்தை சிறு மூட்டையாகக் கட்டி மண் பானைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

*

மொட்டை மாடியில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் படும்படி பானையின் வாயை மெல்லிய துணியால் கட்டியும் இதைச் செய்யலாம்.​ இந்தத் தண்ணீரைக் காலையில் பருகுவதால் பித்த ஊறலை மட்டுப்படுத்தி,​​ உங்களுடைய வாய் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் கறையிலிருந்து விடுபடலாம்.​ வாய் கொப்பளிப்பதற்கு இந்தப் பானைத் தண்ணீரையே பயன்படுத்தவும்.

*

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயைச் சீவல் போல சீவி வைத்துக் கொண்டு,​​ சிறிய அளவில் வாயில் போட்டு மென்று தின்றுவிடவும்.​

*

நல்ல தூக்கத்தைத் தரும்.​ வாயில் அதிக எச்சில் ஊறுவதை மட்டுப்படுத்தும்.​ வயிற்றில் பித்த சுரப்பையும் தடுக்கும்.

*

இருமாதங்களுக்கு ஒரு முறை சூரத்தாவரை இலை,​​ ரோஜாமொக்கு,​​ காய்ந்த திராட்சை,​​ பிஞ்சுக் கடுக்காய்,​​ சுக்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து இரவு முழுவதும் சுமார் 300 மி.லி.​

*

தண்ணீரில் ஊறவைத்து,​​ மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க,​​ நீர்ப் பேதியாகி குடலிலிருந்து தேவையற்ற பித்தத்தை வெளியேற்றிவிடும்.

*

உணவில் உப்பு,​​ புளி,​​ காரம் குறைக்கவும்.​ நொறுக்குத் தீனி எனப்படும் மிக்ஸர்,​​ முறுக்கு,​​ சிப்ஸ் போன்றவற்றை மாலை வேளைகளில் சாப்பிடுவதை நிறுத்தி,​​ நல்ல இனிப்புச் சுவையுள்ள பழங்களாகிய வாழைப்பழம்,​​ திராட்சை,​​ ஆப்பிள்,​​ பலாப் பழம்,​​ சப்போட்டா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சாப்பிடவும்.​

*

காப்பி,​​ டீக்குப் பதிலாக ஹார்லிக்ஸ்,​​ போர்ன்விட்டா,​​ காம்ப்ளான் போன்றவற்றில் ஒன்றைப் பாலுடன் கலந்து பருகவும்.​ உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.


***


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

***
நன்றி தினமணி.
***

"வாழ்க வளமுடன்"

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment: