Tuesday, April 5, 2011

சிகரெட்டை விட செல்போனை பயன்படுத்துவது அதிக ஆபத்தானது



செல்போனை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தூங்கும்போது கூட காதில் அதை கட்டிக்கொண்டே தூங்குகிறார்கள்.

*

ஆனால் அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் பலியாகிறார்கள்.

*

ஆனால் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் உயிர் ஆபத்துக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிïரோ சர்ஜனும், பேராசிரியருமான குரானா தெரிவித்தார்.

*

ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அது வளர்ச்சி அடைவதற்கு 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் 10 ஆண்டுகள் செல்போன் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் ஆபத்து இரு மடங்காக பெருகிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*

எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் நிïரோ சர்ஜன் குரானா தெரிவித்து இருக்கிறார். அதிக அளவுக்கு செல்போனை பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

*

எனவே செல்போனில் ஏற்படும் கதிரியக்கத்தை குறைக்க செல்போன் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/9532.html

***



"வாழ்க வளமுடன்"


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment