Monday, April 25, 2011

கடல் நண்டு ஓடு பக்கவாதத்தை குணப்படுத்தும்!

லண்டன் :




கடல் நண்டின் ஓட்டில், பக்கவாதத்தை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

***

அமெரிக்கா, இண்டியானா பகுதியிலுள்ள பக்கவாத ஆராய்ச்சி மைய இயக்குனர் ரிச்சர்ட் போர்ஜென் கூறியதாவது:

பக்கவாதத்துக்கு பல்வேறு மருந்துகள் இருந்தாலும், அவை முற்றிலும் குணமாக்குவதில்லை.

*

ஆனால், கடல் நண்டின் ஓட்டில், ஒருவகை ரசாயனம் உள்ளது.

*

ரசாயனமாக இருந்து சர்க்கரையாகும் இந்த பொருளுக்கு, நரம்பு மண்டல பாதிப்புகளை குணமாக்கும் சக்தி உள்ளது.

*

குறிப்பாக முதுகு தண்டு பாதிப்பை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

*

பக்கவாதத்துக்கு நல்ல மருந்து இல்லாமல்இருந்தது. தற்போது இந்த நண்டு ஓடு எங்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

*

நண்டு ஓட்டில் சேகரமாகக் கூடிய இந்த ரசாயனத்தை, சுத்தமான தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ரத்தத்தில் செலுத்தினால், ரத்தத்தில் கலந்த பின் இந்த ரசாயனம் சர்க்கரையாகமாறி, முதுகுதண்டில் ஏற்பட்ட பாதிப்புகளையும், நரம்பு மண்டல பாதிப்புகளையும் குணமாக்குகிறது.

*

கினியா பன்றிகளுக்கு இந்த சோதனை செய்து பார்த்ததில், முழு வெற்றி கிடைத்துள்ளது.

*

மனிதர்களுக்கு, இந்த நண்டு ஓடு ரசாயனத்தை செலுத்தி பார்த்து
சோதனை செய்து வருகிறோம்.

இவ்வாறு ரிச்சர்ட் போர்ஜென் கூறினார்.


***

நன்றி - தினமலர்
April 2010

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment