Wednesday, March 16, 2011

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:

குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோற்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கனும்.



*****



சாப்பிடும் பொழுது:











1. நீங்கள் சாப்பிடும் பொழுது குழந்தையும் ஒன்றாக உட்கார வைத்து அவங்களுக்கு ஒரு தட்டு வைத்து கையால் சாப்பிட சொல்லிக்கொடுங்க.







***







2. சாப்பிடும் முன்பு கைகளை கழுவனும் என்று கைகளை கழுவி விடுங்க.







***





3. இந்த உணவுகளை தந்த இறைவனை நினைக்க சொல்லுங்க. பின்பு சாப்பிட சொல்லுங்க.









***







4. அப்பா இந்த உணவுக்காக தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க நீ கீழே சிந்தாமல் சாப்பிடுமா என்று சொல்லுங்க.



*



(முதலில் சிந்தி தான் சாப்பிடும் போக போக பழகிவிடுவாங்க)காய்கறிகள், கூட்டு சேர்த்து சாப்பிடுமா என்று சொல்லுங்கள்.





***







5. சாப்பிட்டு முடிந்த பின்பு கைகளை அலசி விட்டு கை துடைக்கும் துண்டில் துடைக்க பழகி கொடுங்க. (சில குழந்தைகள் அவங்க டிரெஸில் துடைத்துக்கொள்கிறார்கள்)







***







6. அவங்களையே பல் துலக்க சொல்லிக்கொடுங்க. 3 வயதுக்கு மேல் தனியாக குளிக்க சொல்லிக்கொடுங்க.





********



டி.வீ பார்க்கும் பொழுது:







சின்ன குழந்தைகள் டீ.வீயில் கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே தான் பார்ப்பாங்க. நாம் ரிமோட் கேட்டால் தரமாட்டாங்க. அப்படியே விடாமல் அவர்களிடம் செல்லமே இவ்வளவு நேரம் நீ டீ.வீ பார்த்த இப்ப அம்மாவுக்கு பிடித்த ப்ரோகிரம் வருது கொஞ்ச நேரம் பார்க்கிறேன் என்று அன்பாய் சொல்லி வாங்குங்கள்.







*





வீண்ணாக லைட் ,ஃபேன், டீ.வீ ஓடுவைதை ஆஃப் பண்ணச்சொல்லுங்க.



***




வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.விருந்தினர் வரும் பொழுது வாங்க, எப்படியிருக்கிங்க என்று கேட்க்க சொல்லிக் கொடுங்க.சில குழந்தைகள் கூச்ச சுகபாவமாக இருப்பாங்க அவங்களை சகஜமாக மற்றவர்கள் முன்பு பேச பழக வைக்கவும்.உறவுமுறைகள் சொல்லி அழைக்க சொல்லுங்க.




***




உங்கள் செல்ல குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள், ரைமிஸ் ராகத்துடன் சொல்லிக்கொடுங்க.. நல்ல விசயங்களை வீட்டில் இருக்கும் நாம் தான் ஆசிரியராக இருந்துச் சொல்லிக் கொடுக்கனும். அப்பறம் தான் பள்ளி படிப்பு.



****************


இவைகளை ஒவ்வெரு குழந்தைகளுக்கும் நாம் கற்றுக் கொடுத்தால் அவர்களின் வாழ்வு மிகவும் மகிழ்ச்சியாகவும், செழுமையாகவும் இருக்கும்.

*
வெற்றியும் நிச்சயம்.


*
by Mrs.Faizakader
நன்றி Mrs.Faizakader

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment