Wednesday, March 30, 2011

குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?



குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும்.

தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.

குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.

அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.

குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.

குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.

தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.

குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.

ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.

குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.

அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்.


***



பச்சிளங்குழந்தை சில அபாய அறிகுறிகள்

குறைமாதத்தில் (37 வாரத்திற்கும் குறைவாக) குழந்தை பிறத்தல்.

குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல்.

பிறந்தவுடன் அழாமல், மூச்சுவிடாமல் இருத்தல்.

மிக வேகமாக மூச்சு விடுதல், மூச்சுத்திணறல்

மிக அதிகமாக தொடர்ந்து கத்திக் கொண்டு இருத்தல்.

சரியாக பால் குடிக்க முடியாமை, சுறுசுறுப்பில்லாமை.

பால் குடித்தபின் மூச்சுத்திணறல் _ எதுக்களித்தல்

குழந்தையின் உடல் உஷ்ணம் மிகக் குறைதல்.

வலிப்பு (ஜன்னி) வருதல்.

ஆபத்தான பிறவிக் குறைபாடுகள்.

பிறந்த 24 மணி நேரத்திற்குள் மஞ்சள்காமாலை ஏற்படுதல்.

பிறந்த 24 மணிக்குள் மலம், 48 மணிக்குள் நீர் போகாமை.

வாந்தி & வயிற்றுப்போக்கு.

குழந்தையின் எப்பகுதியிலாவது ரத்தம் கசிதல்.

வயிறு வீக்கமாக இருத்தல்.


***


குறைமாத குழந்தைக்கு அதிக கவனம் தேவை

குழந்தையின் உஷ்ணம் குறைய வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

தேவைப்படின் வார்மர் (Warmer) இங்குபேட்டர் (Incubater) வைத்து பாதுகாக்க வேண்டும்.

பால் குடிக்க முடியாத நிலையில் _ ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தவும்.

பால் குடிக்காத குழந்தைக்கு _ தாய்ப்பாலை சங்கில் எடுத்து ஊட்ட வேண்டும்.

இக்குழந்தைகளை நோய்கிருமிகள் எளிதாக தாக்கும்.

இக்குழந்தைகளை குளிப்பாட்டுவதை தவிர்க்கவும்.



***

நன்றி ஈகரை.


***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment