Sunday, December 26, 2010

சொந்த விஷயம்

எனக்கு ரோஜாப்பூ தான் பிடிக்குமென்றால்,நீ''இல்லை,இல்லை,மல்லிகைப்பூ தான் உனக்குப் பிடித்திருக்க வேண்டும்,''என்று சொல்வதில்லை.என் விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறாய்.உனக்கு மல்லிகைப்பூ தான் பிடிக்குமென்றால் அதுவும் சரிதான்.இதல் வாக்குவாதம் ஏது?சச்சரவு ஏது?நாமிருவரும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.புத்தியைத் தீட்டி உரசிக் கொள்ள வேண்டியதில்லை.எனக்கு ரோஜா பிடிக்குமென்பதாலேயே,உனக்கு மல்லிகை பிடிக்கும் என்பது பற்றி நான் எந்த வருத்தமும் பட வேண்டிய அவசியமில்லை.விரும்புவதும் விரும்பாததும் சொந்த விஷயங்கள்.ஒருவருக்கு கீதை பிடித்தால்,மற்றொருவருக்கு பைபிளும் இன்னொருவருக்கு குரானும் பிடித்துப் போகலாம்.சரிதான்.இதில் எந்தக் குற்றமோ குறையோ இல்லை.நமது விருப்பங்களை நமக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.பிறரை வற்புறுத்தக்கூடாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment